தேவேந்திர குல வேளாளர் குறித்து முதல்வர் பழனிசாமி முக்கிய அறிவிப்பு
தேவேந்திர குல வேளாளர் குறித்து முதல்வர் பழனிசாமி முக்கிய அறிவிப்பு
முதல்வர் பழனிசாமி
பட்டியலினத்தின் 7 உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இனி தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்பட மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பட்டியலினத்தின் 7 உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க வேண்டும் என்பது அந்தப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இதற்கான தொடர்ச்சியாக அவர்கள் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், அந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர், தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.
அப்போது தேவேந்திர குலத்தான், கடையன், பாதிரியான் உள்ளிட்ட 7 உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளதாகவும், பொதுப்பெயரில் அழைக்கப்பட்டாலும் அவர்கள் ஏற்கனவே பெற்று வரும் சலுகைகள் தொடரும் என்றும் முதல்வர் கூறியுள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.