உயர் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை அருகே மெய்யபுரத்தில் குறிப்பிட்ட வழியில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு போலீஸார் தடைவிதித்த நிலையில், அவர்களுடன் பாஜகவின் தேசியச் செயலாளர் எச்.ராஜா கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உயர் நீதிமன்றத்தை விமர்சித்த அவர், காவலர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “எச்.ராஜா காவல்துறை குறித்தும் நீதிமன்றம் குறித்து மிக மோசமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இது குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. காவல்துறையினர் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் மோசமான சொற்களை பயன்படுத்தி பேசிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது” என்று கூறினார்.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் விநாயகர் ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசிய எச்.ராஜா, “நீதிமன்றத்தை மதிப்பவன் நான். நான் பேசியதை எடிட் செய்து பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் சிலர் பரப்புகிறார்கள்” என்று கூறினார்.
மேலும், உயர் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சமூக வலைதளங்களில் பரவிய எச்.ராஜாவின் வீடியோவை தொடர்ந்து போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 8 cases against hraja, BJP's national secretary H. Raja, High court