சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. அதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் கடந்த 7ம் தேதி அகரத்தில் நடைபெற்ற பணியின்போது 5 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கபட்டிருந்தது. இதன் ஒரு உறை என்பது முக்கால் அடி உயரமும், இரண்டு அறை அடி அகலமும் கொண்டுள்ளது.
Also read: உயிரிழந்த தன் காளையின் நினைவாய் முழு உருவச்சிலை வைத்த விவசாயி
மொத்தம் 5 உறைகள் கொண்ட கிணறு கண்டுபிடிக்கபட்ட நிலையில், இன்று மேலும் 6 உறைகள் சேர்த்து 11 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, பண்டைய தமிழர்கள் தண்ணீரை அதிக அளவில் சேமிக்க உறை கிணற்றை பயன்படுத்தியிருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Excavation, Keezhadi