தமிழகத்தில் வரும் 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னையிலிருந்து சொந்த ஊர் செல் பொதுமக்கள் ஆர்வமாக செல்வது வழக்கம். ரயில்களின் டிக்கெட் விற்று தீர்ந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக போக்குவரத்து கழகம் சார்பில், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 12, 13, 14 ஆகிய 3 நாட்களுக்கு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பேருந்துகளில் முன் பதிவு நிறைவு செய்யப்பட்ட நிலையில், நாளை முதல் கூடுதலாக பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் சார்பில் 340 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நாளை முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் மெப்ஸ், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய 6 பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலாக 340 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Bus, Pongal 2023, Pongal festival, Tamilnadu