சென்னை மெரினா கடற்கரை மணலில் சாராயம் புதைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் விசாரணையில் மெரீனா கடற்கரையில் உள்ள நேதாஜி சிலைக்கும், கண்ணகி சிலைக்கும் இடைப்பட்ட மணற்பரப்பில் கள்ளச்சாராயம் புதைத்து வைத்து இருப்பது தெரிந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கடந்த 14 ம் தேதி மணற்பரப்பில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டபர். அப்போது மணற்பரப்பில் 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலில் சாராயத்தை அடைத்து மணலில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மொத்தம் 35 லிட்டர் சாராயத்தை மண்ற்பரப்பை தோண்டி பறிமுதல் செய்தனர்.
இதனை மணலில் புதைத்து வைத்து விற்பனை செய்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஜென்தூஸ் கோஸ்லயா, சில்பா போஸ்லே, சுனந்தா ஆகியோரை கைது செய்து மெரீனா காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஊசிமணி, பாசிமணி விற்கும் இவர்கள் கூட்டுக்குடும்பமாக வெளி மாநிலங்களில் மெரினாவில் தங்கி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருவதும் இவர்களில் சிலர் ஆந்திரா மாநிலத்தில் இருந்து சாராயம் வாங்கி வந்து மெரினா மணற்பரப்புகளில் புதைத்து வைத்து அதன் தரத்துக்கேற்க ஒரு லிட்டர் பாட்டில் ரூ.300 லிருந்து ரூ. 600 வரை விற்று வந்ததும் தெரியவந்தது.
Also Read : கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு... முதல் தகவல் அறிக்கை நகல் வெளியீடு
காய்கறி சரக்கு லாரிகளில் ஆந்திரா சென்று அதே போல காய்கறி சரக்கு லாரிகளில் ஊசி மணி, பாசி மணி விற்கும் பைகளில் போட்டு மறைத்து எடுத்து வருவதும், ஊசி மணி பாசி மணி விற்பதாக கூறி போலீசாரிடம் தப்பி சென்னை எடுத்து வந்து விற்பனையில் ஈடுப்பட்டதும் தெரியவந்தது.
மேலும், இவர்களிடம் நடத்திய விசாரணையில் மெரினா கடற்பரப்பில் இன்னும் பாட்டில்களில் அடைக்கப்பட்டு புதைத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து இன்று மாலை மெரினா போலீசார் புல்டோசர் உதவியுடன் மெரினா நீச்சல் குளம் அருகே பாட்டிலில் அடைத்து மணற்பரப்பில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 27 லிட்டர் சாரயத்தை தோண்டி எடுத்தனர். மேலும், மற்ற இடங்களிலும் சாராயம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும், மண்ற்பரப்பில் புதைத்து சாராய விற்பனையில் ஈடுப்பட்டு வரும் மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News