தமிழ் நாடு அரசுத் துறைகளில் உள்ள 7,301 காலி இடங்களை நிரப்புவதற்கான டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்க உள்ளது.
அரசுப் பணியாளர் தேர்வு ஆணையமான டி.என்.பி.எஸ்.சி. வாயிலாக அரசுத் துறைகளில் காலியாக உள்ள 7,301 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் இன்று (ஜூலை 24) குரூப் - 4' தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுத 12 லட்சத்து 67 ஆயிரம் பெண்கள், 131 மூன்றாம் பாலினத்தவர் உள்பட, 22 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில், 503 மையங்களில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வில், 10ம் வகுப்பு தரத்தில் 300 மதிப்பெண்களுக்கு வினா தொகுப்பு புத்தகம் வழங்கப்படும். கட்டாய தமிழ் மொழி தகுதி மதிப்பீட்டு தாளில் 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் இடம் பெறும். பொதுப் படிப்பு, திறனறிதல் ஆகியவற்றில் 100 கேள்விகள் இடம் பெறும். அனைத்திலும் சேர்த்து குறைந்தபட்சம் 90 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே, தேர்ச்சி பட்டியலில் தேர்வர்கள் இடம் பெறுவர்.
பொதுத் தமிழ் பிரிவில் குறைந்தபட்சம் 60 மதிப்பெண்களை எடுத்திருந்தால் மட்டுமே, அடுத்த பிரிவில் இடம் பெற்றுள்ள விடைகள், மதிப்பீடு செய்யப்படும்.
தேர்வு நடைபெறும் மையத்திற்குள் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் அரசின் அனைத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வில் பங்கேற்பவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில், 11 ஆயிரத்து 670 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தேர்வு மையங்களில் சிறப்பு பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்கான ஒருங்கிணைப்பு பணியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபடுவர் எனவும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. குருப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் இறுதியில் வெளியிடப்படுகிறது
குரூப் 4 தேர்வு தேர்வர்கள் கடைபிடிக்க வேண்டியவை:
தேர்வர்கள் காலை 8.30 மணி அளவில் தேர்வு மையங்களுக்கு செல்ல வேண்டும் 9 மணிக்கு omr தாள்கள் வழங்கப்படும்
12.45 முன்னதாக தேர்வர்கள் யாரும் வெளியேறக்கூடாது
தேர்வர்கள் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்
செல்போன்கள் மற்றும் இதர பொருட்கள் தேர்வு மையத்திற்குள் கொண்டு செல்ல அனுமதி இல்லை
தேர்வர்கள் தங்களுடைய கையெழுத்தை omr தாள்களில் இரண்டு இடங்களில் பதிவிட வேண்டும்
தங்களுடைய இடதுகை பெருவிரல் ரேகையை ஓஎம்ஆர் தாள்களில் தேர்வு முடிந்த பின்னர் பதிவிட வேண்டும்
ஓஎம்ஆர் தாள்களில் கருப்பு பால் பாய்ண்ட் பேனாவைத் தவிர பென்சில் அல்லது வேறு பேனாவில்
பதி விடக்கூடாது
Omr தாள்களில் தேர்வர்கள் தங்களுடைய பதிவு எண்ணை பதிவு செய்ய வேண்டும்
ஓஎம்ஆர் தாள்களில் ஒரு கட்டத்தை தவிர ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டங்களை தேர்வர்கள் விடைகளாக குறிக்கக்கூடாது
விடைதெரியாத கேள்விக்கு கொடுக்கப்பட்ட omr தாளில் உள்ள E என்கிற கட்டத்தை குறிக்க வேண்டும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Group 4, Group Exams