மலேசியாவில் தந்தை மாட்டிக்கொள்ள, படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு போகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர் புதுக்கோட்டையைச் சேர்ந்த 2 சிறுவர்கள்.
ஆலங்குடி அருகே உள்ள வடகாடு சாத்தன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வேலாயுதத்தை மலேசியாவிற்கு அழைத்துச்சென்ற ஏஜெண்ட், அவரை ஒரு உணவகத்தில் விற்றதோடு, பாஸ்போர்ட்டையும் எடுத்துச்சென்றதாக தெரிகிறது.
அங்கிருந்த தப்பிய வேலாயுதம், தன்னை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு இந்திய தூதரத்தை அணுகியுள்ளார். அவருக்கு வெள்ளைநிற பாஸ்போர்ட் வழங்கிய தூதரகத்தினர், அறுபதாயிரம் செலுத்தினால் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறியுள்ளனர். ஆனால் அந்த பணத்தை அவரது குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை.
12-ஆம் வகுப்பை முடித்துள்ள மகன், படிப்பை நிறுத்திவிட்டு கூலிவேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அடுத்தடுத்த மகன்களின் படிப்பும் நிறுத்தப்படும் சூழலில் உள்ளது.
மகன்களை படிக்க வைக்க வழியின்றி வறுமையில் வாடும் அவரது மனைவி, தனது கணவரை எப்படியாவது மத்திய மாநில அரசுகள் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.