வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக
சென்னை உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசயல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவரசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியுள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இந்த சட்டம் இயற்றப்பட்டதாகவும் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தலை கருத்தில் கொண்டே இச்சட்டம் இயற்றப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடப்பட்டது.
வன்னியருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், வன்னியர் பிரிவில் 7 சாதிகள் உள்ளதாகவும், இச்சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் பாமக தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், “இட ஒதுக்கீடு வழங்கியதற்கு வரலாற்று காரணாங்கள் உண்டு. முந்தைய அரசு கொண்டு வந்ததை இந்த அரசும் தொடரும் என தெரிவித்திருந்தோம். ஆனால் சட்டப்படி செல்லாது என அறிவித்துள்ளனர். சரியான காரணங்கள் உள்ளதால் மேல் முறையீடு செல்லலாம் என்பதை அரசிற்கு தெரிவிக்க உள்ளோம், அதனை ஏற்று அரசும் மேல்முறையீடு செல்லும் என நம்புகிறேன்.
Must Read : ஊட்டி மலை ரயில் சேவை 15 நாள்களுக்கு நிறுத்தம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
அரசியல் காரணங்களுக்காக இந்த சட்டம் இயற்றபட்டதாக மனுதாரர்கள் தரப்பில் கூறினார்கள். ஆனால், நாங்கள் அதற்கு எதிராக வாதங்களை முன் வைத்தோம். இட ஒதுக்கீடு வழங்க அரசுக்கு உரிமை உள்ளது. 10.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதற்காக தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்ய உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 10.5% இட ஒதுக்கீட்டில் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமைச்செயலகத்தில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.