புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இந்திய குத்துச்சண்டை வீரர்கள் தங்களுடைய தங்கப் பதக்கங்களை சமர்பித்து மரியாதை செய்துள்ளனர்.
பல்கேரியாவின் சோபியா நகரில் 70-வது ஸ்டேரன்ஜா சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. மகளிர் பிரிவில் இந்தியாவின் நிகாத் ஸரீன், மீனாகுமாரி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
இதன் மூலம், இந்த தொடர் வரலாற்றில் மகளிர் பிரிவில் முதல் முறையாக தங்கப் பதக்கதம் வென்ற இந்திய வீராங்கனைகள் என்ற சாதனையை நிகாத் ஸரீன், மீனா குமாரி படைத்துள்ளனர். அதேபோல், ஆடவர் பிரிவில் அமித் பங்கல் தங்கம் வென்று அசத்தினார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அவர், 2-வது முறையாக தங்கம் வென்று சாதித்தார்.

தங்கப் பதக்கங்களுடன் இந்திய வீரர், வீராங்கனைகள்.
ஸ்டேரன்ஜா போட்டி முடிவில் மூன்று தங்கம் உள்பட மொத்தம் 7 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன. இதனை அடுத்து, குத்துச்சண்டை வீராங்கனை நிகாத் ஸரீன் தனது தங்கப் பதக்கத்தை, புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு வழங்குவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் தனது தங்கப் பதக்கத்தையும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அளிப்பதாக கூறியுள்ளார். இவர்களின் உயிரிழந்த ராணுவத்தினருக்கு செய்த மரியாதை அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.
VIDEO: தோனியைப் பார்த்துக் கதறி அழுத குழந்தை..!
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.