சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆசியக் கோப்பை தங்கப்பதக்க வீராங்கனை யீ ஷீ வாங் என்பவரை 21-9, 11-21, 21-15 ஆகிய செட்களில் வீழ்த்தி முதல் முறையாக இந்தத் தொடரை வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் நரேந்திர
மோடி தன் பாராட்டுதல்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தன் சமூக ஊடகப்பக்கத்தில் குறிப்பிடும்போது, “முதல் முறையாக சிங்கப்பூர் ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற சிந்துவுக்கு என் வாழ்த்துக்கள். இன்னொரு முறையும் அவர் தன் தனித்துவமான விளையாட்டுத்திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். இது நாட்டுக்கு பெருமை சேர்க்கும் தருணம், அதே சமயத்தில் வளர்ந்து வரும் வீரர்களுக்கும் ஒரு பெரிய அகத்தூண்டுதல்” என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்:
பி.வி.சிந்து இந்த வெற்றி குறித்து குறிப்பிடுகையில், “கடைசி இரண்டு தொடர்களில் கடினமான மேட்ச்களை ஆடினேன்.ஆனால் காலிறுதியில் அரையிறுதியில் தோற்றது ஏமாற்றமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியும் முக்கியம் அந்தவகையில் சிங்கப்பூர் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிங்கப்பூர் ஓபன் ஆடி பட்டம் வென்றது உண்மையில் நிறைவைத் தருகிறது. இதே உத்வேகத்துடன் இனிவரும் தொடர்களிலும் வெல்ல வேண்டும். இப்போது ஓய்வு எடுத்துக் கொண்டு காமன் வெல்த் போட்டிகளில் பதக்கம் வெல்வேன்.
இதனைத் தொடர்ந்து உலக சாம்பியன்ஷிப், ஜப்பான் ஓபன், இதிலும் பதக்கம் வெல்வேன்” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.