விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
விம்பிள்டன் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரும் நடப்பு விம்பிள்டன் சாம்பியனுமான ஜோகோவிச், இத்தாலியை சேர்ந்த மாட்டியோ பெரெட்டினியை எதிர்த்து போட்டியிட்டார். ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் சுற்றில் இரு வீரர்களும் கடுமையாக மோதினர். இதனால் முதல் செட்டில் 7-6 என போராடி முதல் செட்டை ஜோகோவிச் கைப்பற்றினார்.
இதை தொடர்ந்து ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். இதையடுத்து 6-7, 6-4, 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று மகுடம் சூடினார். இந்தப் போட்டி மொத்தம் 3 மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்றது.
செர்பியாவை சேர்ந்த வீரரான ஜோகோவிச் விளையாடிய 30வது கிராண்ட்ஸ்லாம் இறுதிப்போட்டி இதுவாகும். இதுமட்டுமல்லாமல் தற்போது 20 முறையாக கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள அசத்தியுள்ளார். இதற்கு முன்னர் ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நடால் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.