சிங்கப்பூர் நீச்சல்: இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம் உட்பட 5 பதக்கங்கள்
சிங்கப்பூர் நீச்சல்: இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம் உட்பட 5 பதக்கங்கள்
நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ்
சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் இந்தியா ஐந்து பதக்கங்களை வென்றது, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஸ்ரீஹரி நடராஜ் மற்றும் மானா படேல் ஆகியோர் முறையே தலா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்றனர்.
சிங்கப்பூர் தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் இந்தியா ஐந்து பதக்கங்களை வென்றது, டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஸ்ரீஹரி நடராஜ் மற்றும் மானா படேல் ஆகியோர் முறையே தலா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி வென்றனர்.
இந்திய நீச்சல் வீரர்கள் மிஹிர் ஆம்ப்ரே 50 மீ பட்டர்ஃபிளை வென்றார், மேலும் அனீஷ் கவுடா 800 மீ ஃப்ரீஸ்டைல் வென்றார், காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு முன்னதாக நடந்த இந்தப் போட்டியின் முதல் நாளில் இந்தியர்கள் மூன்று தங்கத்தை வென்றனர்.
சிவா ஸ்ரீதர் 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் 57.58 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார், ஒரே நாளில் இந்திய நீச்சல் வீரர்கள் மூன்று தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் வென்றனர்.
ஒலிம்பிக் ஸ்டாண்டர்ட் டைமை எட்டிய இந்திய இளம் நீச்சல் வீரர் என்ற பெருமைக்குரிய நடராஜ் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் 55.32 வினாடிகளில் தங்கம் வெல்லும் பாதையில் வலுவாகத் தொடங்கினார்.
பெண்களுக்கான 100 மீட்டர் பேக் ஸ்ட்ரோக்கில் மானா 1:04.47 என்று கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். அம்ப்ரே 50 மீ பட்டர்ஃபிளை தனிப்பட்ட சிறந்த நேரமான 24.66 வினாடிகளுடன் வென்றார், அதே நேரத்தில் கவுடா 800 மீ ஃப்ரீஸ்டைலில் 8:14.08 என்று தூரத்தைக் கடந்தார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.