முகப்பு /செய்தி /விளையாட்டு / மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்திய சென்னையின் எப்.சி. கால்பந்தாட்ட அணி வீரர்கள்…

மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்திய சென்னையின் எப்.சி. கால்பந்தாட்ட அணி வீரர்கள்…

சென்னையின் எஃப்.சி. அணி

சென்னையின் எஃப்.சி. அணி

சென்னையின் எப்.சி. கால்பந்தாட்ட அணியின் உரிமையாளர்களாக மகேந்திர சிங் தோனி, நடிகர் அபிஷேக் பச்சன் ஆகியோர் உள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மெரினா கடற்கரையை சென்னையின் எப்.சி. கால்பந்தாட்ட அணி வீரர்கள் தூய்மைப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட்டை போன்று இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் கால்பந்தாட்ட போட்டிகள் கடந்த 2014ஆம் முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னையின் எப்.சி. என்ற கால்பந்தாட்ட அணி விளையாடுகிறது. இதன் உரிமையாளர்களாக தோனி, நடிகர் அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

இந்நிலையில் அணியில் இடம்பெற்றுள்ள எட்வின், சங்வான், டுகர், கரிகாரி உள்ளிட்ட வீரர்கள் தலைமை பயிற்சியாளர் ப்ரெட்ரிக், துணை பயிற்சியாளர் ஜர்மதியுடன் இணைந்து சென்னை மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தினர்.

இதுகுறித்து அணியின் கேப்டன் அனிருத் தாபா கூறுகையில், ‘கடற்கரையை தூய்மைப்படுத்துவதன் மூலம் இந்த பூமிக்கு எங்களால் ஆன சிறிய பங்களிப்பை செய்கிறோம்.

இதனை எங்கள் வீரர்கள் ஆர்வமுடன் மேற்கொண்டனர்.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதை நாங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறோம்’ என்றார்.

First published:

Tags: Football, ISL Football League