துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வரும் 12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடந்த பெண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் கரோலின் டி அல்மிடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
57 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதியில் இந்திய வீராங்கனை மனிஷா 0-5 என்ற கணக்கில் டோக்கியோ ஒலோம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இத்தாலி வீராங்கனை இர்மா டெஸ்டாவிடம் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் முடிந்தார். 63 கிலோ எடைப்பிரிவின் இரைஇறுதியில் இந்திய வீராங்கனை பர்வீன் 1-4 என்ற கணக்கில் அயர்லாந்து வீராங்கனைஅமை பிராட்ஹர்ஸ்டிடம் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.
திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிஜாமாபாத் (தெலுங்கானா) குத்துச்சண்டை வீராங்கனை நிகத், அரையிறுதியில் பிரேசிலின் கரோலின் டி அல்மெய்டாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
தனது இரண்டாவது உலக சாம்பியன்ஷிப்பை விளையாடும் நிகத், வியாழன் அன்று ஃப்ளைவெயிட் இறுதிப் போட்டியில் தாய்லாந்தின் ஜிட்பாங் ஜூடாமாஸை எதிர்த்துப் போட்டியிட்டபோது தங்கப் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு முறை உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற அனுபவமிக்க கசாக் குத்துச்சண்டை வீராங்கனை ஜைனா ஷெகர்பெகோவாவை அரையிறுதியில் 4-1 என்ற கணக்கில் ஜூடாமாஸ் வீழ்த்தினார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.