ஐ.பி.எல் தொடரின் 48-வது போட்டியில் பஞ்சாப் அணியும் பெங்களூரு அணியும் மோதின. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக விராட் கோலியும், தேவ்தத் படிக்கல்லும் களமிறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஹென்ரிக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கிஹிஸ்டியன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அதனையடுத்து, களமிறங்கிய மேக்ஸ்வெல் அதிரடியைக் காட்டினார். படிக்கல் 40 ரன்களில் ஆட்டமிழந்தநிலையில் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 33 பந்துகளில் 57 ரன்களைக் குவித்தார். பெங்களூரு அணி ஆட்டநேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களைக் குவித்தது. 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்கினர்.
கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மறுபுறம் மயங்க் அகர்வாலும் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடத் தொடங்கிய மார்க்ரம்மும் சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் 20 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் பந்திலேயே ஷாருக்கான் ரன்அவுட்டானது பஞ்சாப்புக்கு பின்னடைவானது.
அதனையடுத்து, போட்டி முழுவதுமாக பெங்களூரு கைக்கு சென்றது. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு பஞ்சாப் அணி 158 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி மூன்றாவது அணி ப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.