முகப்பு /செய்தி /sports / IPL 2023: மார்ச் 31-ல் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்.. முதல் போட்டியில் மோதப்போவது எந்தெந்த அணிகள்?

IPL 2023: மார்ச் 31-ல் ஐபிஎல் போட்டிகள் தொடக்கம்.. முதல் போட்டியில் மோதப்போவது எந்தெந்த அணிகள்?

ஐபிஎல் கோப்பைகள்

ஐபிஎல் கோப்பைகள்

கடந்த 3 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக எந்த அணியும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடவில்லை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 16வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு 10 அணிகள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கின்றன. கடந்த ஆண்டு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பையை வென்றது.

இதே போல முதல் முறையாக கடந்த ஆண்டு சென்னை மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவனை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக எந்த அணியும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடவில்லை.

வருகிற மார்ச் 31 ஆம் தேதி மாலை 7.30 மணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெறவிருக்கிறது.

ஐபிஎல் அட்டவணை

First published:

Tags: CSK, IPL 2023