IPL 2022 RCB vs GT- கோலிக்காக இன்று விட்டுக்கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா- வாழ்வா சாவா போட்டியில் குஜராத்தை எதிர்கொள்ளும் ஆர்சிபி
IPL 2022 RCB vs GT- கோலிக்காக இன்று விட்டுக்கொடுப்பாரா ஹர்திக் பாண்டியா- வாழ்வா சாவா போட்டியில் குஜராத்தை எதிர்கொள்ளும் ஆர்சிபி
கோலி
ஆர்சிபி ஐபிஎல் 2022 பிளே ஆஃபில் தகுதி பெற பார்முலா மிகவும் எளிதானது, இன்று குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி 16 புள்ளிகளுக்கு சென்று டெல்லி கேப்பிடல்ஸ் தன் கடைசி லீகில் தோற்க பிரார்த்தனை செய்ய வேண்டும் அவ்வளவே.
ஆர்சிபி ஐபிஎல் 2022 பிளே ஆஃபில் தகுதி பெற பார்முலா மிகவும் எளிதானது, இன்று குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி 16 புள்ளிகளுக்கு சென்று டெல்லி கேப்பிடல்ஸ் தன் கடைசி லீகில் தோற்க பிரார்த்தனை செய்ய வேண்டும் அவ்வளவே. இந்நிலையில்தான் இன்று நண்பர் விராட் கோலி பிளே ஆஃப் சுற்றுக்கு வர வேண்டும் என்று ஹர்திக் பாண்டியா நினைத்து விட்டால், ஏற்கெனவே பிளே ஆஃப் தகுதி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் இன்று ஆர்சிபியை வெற்றி பெறச் செய்ய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. இது ஒரு ஊகம்தான்.
குஜராத்தை வீழ்த்த டுப்ளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், விராட் கோலி போன்ற பெரிய படை தாறுமாறாக அடிக்க வேண்டும். ஜோஷ் ஹேசில்வுட் அன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சாத்து வாங்கி 4 ஓவர் 64 ரன்கள் கொடுத்தார், இன்று அப்படியெல்லாம் வீசினால் குஜராத் 11வது வெற்றியை பெறும்.
பெங்களூரு வெற்றி பெறும் பட்சத்தில் ஐதராபாத், பஞ்சாப் அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்பு கனவு தகர்ந்து விடும். அதே சமயம் பெங்களூரு அணி தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது வரும். எனவே இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கடும் நெருக்கடி பெங்களூரு அணிக்கு இருக்கிறது. அறிமுக அணியாக குஜராத் டைட்டன்ஸ் 13 ஆட்டங்களில் ஆடி 10 வெற்றி, 3 தோல்வியுடன் 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன் அடுத்த சுற்றுக்கு ஏற்கனவே முன்னே றி விட்டது. இந்த ஆட்டத்தின் முடிவு அந்த அணிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால் எந்தவித பதற்றத்துக்கும் வாய்ப்பு இல்லை.
பெங்களூருவுக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
குஜராத் உத்தேச லெவன் - ஷுப்மன் கில், சஹா, ஹர்திக் பாண்டியா, மேத்யு வேட், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷீத் கான், சாய்கிஷோர், லாக்கி பெர்கூசன் அல்லது அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, பிரதீப் சங்வான் அல்லது யாஷ் தயால்.
தினேஷ் கார்த்திக் இறங்கும் வரை ரஷீத் கானுக்கு ஓரிரு ஓவர்களை ஹர்திக் பாண்டியா வைத்திருக்கலாம். ஏனெனில் ரஷீத் கான் தினேஷ் கார்த்திக்கை 3 முறை வீழ்த்தியுள்ளார். அதே போல் முகமது சிராஜ் பவர் ப்ளேயில் ஓவருக்கு கிட்டத்தட்ட 10 ரன்கள் வரை கொடுத்துள்ளார், எனவே அவரை மிடில் ஓவர்களில் வைத்துக் கொள்ள டுபிளெசிஸ் முடிவெடுப்பார்.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.