ராஜஸ்தான் அணிக்கு 151 ரன்களை வெற்றி இலக்காக
சென்னை அணி நிர்ணயம் செய்துள்ளது.
மும்பை, ஐபிஎல் 15-வது சீசனில் இன்று நடைபெற்று வரும் 68-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து டெவோன் கான்வே உடன் மொயின் அலி ஜோடி சேர்ந்தார். 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டெவோன் கான்வே ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் மொயின் அலி ராஜஸ்தான் பந்துவீச்சாளர்களை அசரடித்தார்.
தொடர்ந்து, மொயின் அலி டிரென்ட் போல்ட் வீசிய 6-வது ஓவரில் அவர் ஒரு சிக்சர், 5 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மறுமுனையில் ராயுடு, ஜெகதீசன் அனைவரும் வந்த வேகத்தில் ஆட்டமிழந்தனர். பின்னர், கேப்டன் தோனி - மொயின் அலி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
19-வது ஓவரில் தோனி 26 ரன்கள் எடுத்து சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடி வந்த மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்குகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.