முகப்பு /செய்தி /விளையாட்டு / சூர்யாகுமார், டிகாக் அதிரடி: மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சூர்யாகுமார், டிகாக் அதிரடி: மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சூர்யாகுமார் யாதவ்

சூர்யாகுமார் யாதவ்

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் மும்பை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அதன்மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

  • Last Updated :

ஐ.பி.எல் தொடரின் 27-வது போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தனர். அதனையடுத்து, மும்பை அணியின் தொடக்க வீரர்களாக குயின் டிகாக் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். அக்சர் பந்துவீச்சில் ரோஹித் சர்மா 5 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மறுபுறம் டிகாக் அதிரடியாக விளையாடினார்.

அவருடைய சூர்யாகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடிய நிலையில், டிகாக் 53 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, சூர்யாகுமாரும் 53 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார்.

SCHEDULE TIME TABLE:

ORANGE CAP:

இறுதியாக கைரன் பொல்லார்ட் மற்றும் குருணால் பாண்டியா இணை ஆட்டமிழக்காமல் மும்பை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

top videos
    First published:

    Tags: IPL 2020