சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான பரபரப்பான போட்டியில் பஞ்சாப் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல் 2020 தொடரின் 43-வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல், மந்தீப் சிங் களமிறங்கினர். சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே தடுமாறியது.
பஞ்சாப் அணியின் எந்த வீரரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் அந்த அணி 20 ஒவர்கள் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. சன்ரைசர்ஸ் அணி சார்பில் சந்தீப் சர்மா, ஹோல்டர், ரஷித் கான் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கியது. சன்ரைசர்ஸ் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி ரன்குவித்தது. சன்ரைசர்ஸ் 56 ரன்கள் எடுத்திருந்த போது டேவிட் வார்னர் 35 ரன்களில் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே பேரிஸ்டோ 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முருகன் அஸ்வின் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.
தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகியதால் சன்ரைசர்ஸ் அணி நிதானமாக விளையாடியது. பஞ்சாப் போட்டி என்றாலே பரபரப்பு பஞ்சமிருக்காது என்பது போல் இந்த போட்டியும் இறுதி ஓவர்களில் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு கொண்டு சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் அர்ஷ்தீப் சிங் ஓவரை வீசினார். கடைசி ஒவரில் சிறப்பாக வீசினார் அர்ஷ்தீப் சிங். கடைசி ஓவரில் இலக்கை எட்ட முடியாமல் 3 விக்கெட்களையும் பறிகொடுத்தது சன்ரைசர்ஸ். இறுதியாக பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.