முகப்பு /செய்தி /விளையாட்டு / வாட்சன், ராயுடு நிதான ஆட்டம் - 167 ரன்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

வாட்சன், ராயுடு நிதான ஆட்டம் - 167 ரன்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ்

வாட்சன் ராயுடு

வாட்சன் ராயுடு

ஹைதாராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்துள்ளது.

  • Last Updated :

ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் மோதுகின்றன. டாஸ்வென்ற சென்னை பேட்டிங்கைத் தேர்வு செய்தது. சென்னை தொடக்க வீரர்களாக சாம் கரன் மற்றும் டூப்ளிஸிஸ் களமிறங்கினர். சாம் கரன் அதிரடியாக ஆட்டத்தை தொடக்க டூப்ளிஸிஸ் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வாட்சன் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினார். மறுபுறம் அதிரடியாக ஆடிய சாம் கரன் 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்திருந்தநிலையில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து அம்பதி ராயுடு களமிறங்கினார்.

வாட்சன், ராயுடு இணை நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தனர். ராயுடு 34 பந்துகளில் 41 ரன்களும், வாட்சன் 38 பந்துகளில் 42 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தோனி தனது பங்குக்கு 13 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜாவும் 10 பந்துகளில் 25 ரன்களைக் குவித்தார்.

SCHEDULE TIME TABLE:

ORANGE CAP:

அதன் மூலம், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 167 ரன்களைக் குவித்தது. ஹைதராபாத் அணி சார்பில் நட்ராஜன், சந்தீப் சர்மா, கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகைள வீழ்த்தினர்.

top videos
    First published:

    Tags: CSK, IPL 2020