கொரோனாவிற்குப் பிறகும் களைகட்டாத இங்கிலாந்து பப்கள் தற்போது நடைபெற்று வரும் கால்பந்து போட்டிகளால் நிரம்பி வழிகின்றன.ஃபிஃபா சார்பில் தற்போது 22 ஆவது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. மேற்காசிய நாடான கத்தாரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் உலகம் முழுவதுமிருந்தும் 32 அணிகள் பங்கேற்றுள்ளன.
லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தாரில் நேரில் போட்டிகளை கண்டு ரசித்து வருகிறார்கள். அதே போல் உலகில் மற்ற நாடுகளிலும் ஃபுட்பால் ஜூரம் குறையவில்லை. ஆங்காஙகே ரசிகர்கள் ஒன்றாக கூடியிருந்து போட்டிகளை கண்டு ரசித்து வருகிறார்கள். குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிடட நாடுகளில் விடுதிகள், மதுக்கூடங்கள் மற்றும் ப்பகளில் கூட்டமாக அமர்ந்து தங்களுக்கு பிடித்த அணியின் போட்டிகளை ரசிகர்கள் உற்சகமாக கண்டுகளித்து வருகிறார்கள்.
கொரோனா காலத்தில் கடுமையான பாதிப்பை சந்தித்து வந்த ‘பப்’கள், தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன. கத்தாரில் நடக்கும் போட்டிகளை டிவியில் பார்ப்பதற்காக பப்புகளுக்கு ரசிகர்கள் படையெடுக்கின்றனர். அதனால் இங்கிலாந்தில் உள்ள பப்கள் நிரம்பி வழிகின்றன. உலகெங்கும் டிவி உள்ளிட்ட ஊடகங்களின் மூலம் கால்பந்து போட்டியை பார்க்கும் பார்வையாளர்கள், ரசிகர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.
எம்.ஐ. எமிரேட்ஸ் மற்றும் எம்.ஐ கேப்டவுன் அணிக்கு புதிய கேப்டன்கள் அறிவிப்பு
இதனால் பப்களுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்மூலம் இந்த நிதியாண்டில் 155 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் பப்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது.கொரோனாவின் கோர தாணடவத்தால் முடங்கிக் கிடந்த சுற்றுலா தொழில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியால் சுற்றுலா மற்றும் அதன் இணை தொழில்கள் ஏற்றம் கண்டுள்ளன.
செய்தியாளர் : ரொசாரியோ ராய்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: FIFA, FIFA World Cup