முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ஐபிஎல் : பெங்களூரு அணி வெற்றி பெற 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது யு.பி. வாரியர்ஸ்

மகளிர் ஐபிஎல் : பெங்களூரு அணி வெற்றி பெற 136 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது யு.பி. வாரியர்ஸ்

யு.பி. வாரியர்ஸ் அணி

யு.பி. வாரியர்ஸ் அணி

5 ரன்கள் எடுத்திருந்தபோது யு.பி. வாரியர்ஸ் அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி பெறுவற்கு 136 ரன்களை யு.பி. வாரியர்ஸ் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பவுலிங்கை தேர்வு செய்தார்.

வாரியர்ஸ் அணியின் பேட்டர்கள் கேப்டன் அலிசா ஹீலி 1 ரன்னிலும், தேவிகா வைத்யா ரன் ஏதும் எடுக்காமலும், தஹிலா மெக்ராத் 2 ரன்னிலும் ஆட்டமிழந்து அணிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தனர். இதனால் 5 ரன்கள் எடுத்திருந்தபோது அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இன்பின்னர் கிரன் நேவ்கிருடன் இணைந்த கிரேஸ் ஹேரிஸ் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து ரன்களை சேர்த்தார்.

கிரன் 22 ரன்னில் வெளியேற அடுத்து வந்த தீப்தி சர்மாவும் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடத் தொடங்கிய கிரேஸ் ஹேரிஸ் 32 பந்தில் 2 சிக்சர் 5 பவுண்டரியுடன் 46 ரன்கள் எடுத்தார். 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த யு.பி. வாரியர்ஸ் அணி 135 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பெங்களூரு அணி விளையாடி வருகிறது.

First published:

Tags: WIPL