மகளிர் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது.
இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் ஸ்மிருதி மந்தனா – சோபியா டெவின் ஆகியோர் களத்தில் இறங்கினர். ஏற்கனவே பெங்களூரு அணி 4 ஆட்டங்களில் தோல்வி அடைந்திருப்பதால் இந்த போட்டியில் நிதானமாக பேட்டிங் செய்தது. இருப்பினும் கேப்டன் மந்தனா 15 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். சோபி டெவின் 21 ரன்னில் வெளியேறினார். மற்றொரு ஆட்டக்காரர் ஹீதர் நைட் 11 ரன்னில் வெளியேற, பெங்களூரு அணி 12.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது.
இதையடுத்து எலிஸ் பெர்ரியுடன் இணைந்த விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஸ்கோர் உயரத் தொடங்கியது. இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 74 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 16 பந்துகளில் ரிச்சா கோஷ் 3 சிக்சர் 3 பவுண்டரியுடன் 37 ரன்கள் எடுத்தார். எலிஸ் பெர்ரி 52 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 67 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆர்.சி.பி. அணி 150 ரன்களை சேர்த்துள்ளது. இதையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி அணியினர் பேட்டிங்கை தொடங்கியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.