முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL 2023 : கடைசி ஓவரில் குஜராத் அணியை வீழ்த்தி உ.பி. வாரியர்ஸ் த்ரில் வெற்றி…

WPL 2023 : கடைசி ஓவரில் குஜராத் அணியை வீழ்த்தி உ.பி. வாரியர்ஸ் த்ரில் வெற்றி…

உ.பி. வாரியர்ஸ் அணியை வெற்றி பெற வைத்த கிரேஸ் ஹேரிஸ் - எக்லஸ்டோன் இணை

உ.பி. வாரியர்ஸ் அணியை வெற்றி பெற வைத்த கிரேஸ் ஹேரிஸ் - எக்லஸ்டோன் இணை

நடந்து முடிந்த 3 போட்டிகளிலேயே அதிக பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாக இது அமைந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ் அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது.அந்த அணியின் கிரேஸ் ஹாரிஸ் – சோபி எக்லஸ்டோன் இணை 8 ஆவ விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் செய்து அசத்தினர். மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 3 ஆவது லீக் போட்டி குஜராத் ஜெயன்ட்ஸ் – உ.பி. வாரியர்ஸ் அணிகளுக்கு இடையே மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 169 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். சபினேனி மேகனா 24, ஆஷ்லே கார்டனர் 25, ஹேமலதா 21 ரன்கள் சேர்த்தனர். உ.பி. வாரியர்ஸ் தரப்பில் தீப்தி ஷர்மா மற்றும் எக்லஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி உ.பி. வாரியர்ஸ் அணி களத்தில் இறங்கியது.

தொடக்க வீராங்கனைகள் கேப்டன் அலிசா ஹேலி 7 ரன்னிலும், ஷ்வேதா செராவத் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பொறுப்புடன் விளையாடிய கிரன் நேவ்கிர் 53 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறி கொடுத்த நிலையில் 15.4 ஓவரில் 105 ரன்கள் எடுத்திருந்தபோது வாரியர்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டதைப் போல் சூழல் காணப்பட்டது. அப்போது இணைந்த கிரேஸ் ஹாரிஸ் – சோஃபி எக்லஸ்டன் இணை ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. அடுத்தடுத்த ஓவர்களில் சிக்சரும் பவுண்டரிகளும் பறக்க, இந்த இருவரும் போட்டியை வாரியர்ஸ் அணியின் கட்டுப்பாட்டுக்குள் மெல்ல மெல்ல கொண்டு வந்தனர். கடைசி ஓவரில் வாரியர்ஸ் அணி வெற்றி பெற 19 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பேட்டிங் செய்த கிரேஸ் ஹேரிஸ் 2 சிக்சர், 2 பவுண்டரிகள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். நடந்து முடிந்த 3 போட்டிகளிலேயே அதிக பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாக இது அமைந்தது. கிரேஸ் ஹாரிஸ் 26 பந்தில் 3 சிக்சர் 7 பவுண்டரியுடன் 59 ரன்கள் குவித்தார். சோபி எக்லஸ்டோன் 12 பந்தில் 22 ரன்கள் எடுத்து, வலுவான பார்ட்னர்ஷிப் அமைய உதவினார். கடந்த போட்டியில் குஜராத் அணி மும்பையிடம் தோல்வியடைந்த நிலையில், இந்த போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணியிடமும் தோற்றுப்போயுள்ளது.

First published:

Tags: WIPL