முகப்பு /செய்தி /விளையாட்டு / WPL 2023 : ஆர்.சி.பி.-க்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற 156 ரன்கள் இலக்கு

WPL 2023 : ஆர்.சி.பி.-க்கு எதிரான ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற 156 ரன்கள் இலக்கு

ஆர்.சி.பி. விக்கெட் விழுந்ததை கொண்டாடும் மும்பை அணி வீரர்கள்

ஆர்.சி.பி. விக்கெட் விழுந்ததை கொண்டாடும் மும்பை அணி வீரர்கள்

மும்பை அணியின் ஹேலி மேத்யூஸ் அதிகபட்சாக 3 விக்கெட்டுகளை எடுத்தார். சைகா இஷாக் மற்றும் அமேலியா கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India
  • Editor default picture
    reported by :
  • Editor default picture
    published by :Musthak

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற மும்பை அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 4 ஆவது லீக் போட்டி மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தார். தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய அவர் 17 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு ஓபனர் சோபி டிவைன் 16 ரன்னில் வெளியேற அடுத்து வந்த திஷா கசாத் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார்.

மும்பை அணியின் பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தி, பெங்களூரு அணி ரன் குவிக்காமல் பார்த்துக் கொண்டனர். பெங்களூரு அணியில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 28, கனிகா அஹுஜா 22, ஷ்ரேயங்கா பாட்டீல் 23, மேகன் ஷூட்டி 20 ரன்கள் எடுத்தனர். 18.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு அணி 155 ரன்கள் எடுத்தது.

மும்பை அணியின் ஹேலி மேத்யூஸ் அதிகபட்சாக 3 விக்கெட்டுகளை எடுத்தார். சைகா இஷாக் மற்றும் அமேலியா கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களத்தில் இறங்கியுள்ளது.

First published:

Tags: WIPL