முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் ஐபிஎல் : டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற 106 ரன்கள் இலக்கு…

மகளிர் ஐபிஎல் : டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற 106 ரன்கள் இலக்கு…

டெல்லி அணி

டெல்லி அணி

தொடக்க வீராங்கனைகள் சபினேனி மேகனா ரன் ஏதும் எடுக்காமலும், வோல்வார்ட் 1 ரன்னிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு 106 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 8 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் அடிப்படையில் முதலிடத்தில் மும்பையும், அடுத்தடுத்த இடங்களில் டெல்லி, உ.பி. வாரியர்ஸ், குஜராத், பெங்களூரு அணிகள் உள்ளன. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி குஜராத் ஜெயன்ட்சை எதிர்கொண்டுள்ளது.

மும்பையின் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் ஜெயன்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகள் சபினேனி மேகனா ரன் ஏதும் எடுக்காமலும், வோல்வார்ட் 1 ரன்னிலும் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். ஹர்லீன் தியோல் 20 ரன்னும், வேர்ஹாம் 22 ரன்னும், கிம் கார்த் ஆட்டமிழக்காமல் 32 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை எடுத்துள்ளது.

இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேபிடல்ஸ் அணி களத்தில் இறங்கியுள்ளது. இது எளிதான ஸ்கோர் என்பதாலும், டெல்லி அணியில் பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை இருப்பதால் டெல்லி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

First published:

Tags: IPL, WIPL