முகப்பு /செய்தி /விளையாட்டு / மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி : தென்னாப்பிரிக்கா வெற்றி பெற ஆஸி. 157 ரன்கள் இலக்கு

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி : தென்னாப்பிரிக்கா வெற்றி பெற ஆஸி. 157 ரன்கள் இலக்கு

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்டனர்

பந்தை பவுண்டரிக்கு விரட்டும் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்டனர்

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 156 ரன்கள் எடுத்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற 157 ரன்களை ஆஸ்திரேலியா இலக்காக நிர்ணயித்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனைகளாக அலீசா ஹீலி மற்றும் பெத் மூனி ஆகியோர் களத்தில் இறங்கினர்.

அலீசா 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த அஷ்லே கார்டனர் 29 ரன்னில் வெளியேறினார். கிரேஸ் ஹாரிஸ் 10 ரன்னும்,கேப்டன் மெக் லேனிங் 10 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகளை ஒருபக்கம் விழுந்தாலும், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை பெத் மூனி பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தார். கடைசி வரை களத்தில் நின்ற பெத் மூனி 53 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 156 ரன்கள் எடுத்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியில் ஷப்னம் இஸ்மாயில், மேரிஸன் கேப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க வீராங்கனைகள் களத்தில் இறங்கியுள்ளனர்.

First published:

Tags: Cricket