டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 12 அணிகள் மோதும் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத்தேர்வு செய்தது. அதனையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசங்கா, குஷல் பெரிரா களமிறங்கினர். அதில், நிசாங்கா 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து அசலங்கா களமிறங்கினார். அசலங்கா, பெரிரா இணை நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தது. இருவரும் நிதானமான ஆடிய நிலையில், அசலங்கா 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பெரிராவும் 35 ரன்களில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அவிஷ்கா ஃபெர்னாண்டோ 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ராஜபக்ச 33 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.