முகப்பு /செய்தி /விளையாட்டு / ஸ்மிருதி மந்தனாவின் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

ஸ்மிருதி மந்தனாவின் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா

ஸ்மிருதி மந்தனா ஆட்டத்தால் வெற்றி பெற்ற இந்திய அணி..

ஸ்மிருதி மந்தனா ஆட்டத்தால் வெற்றி பெற்ற இந்திய அணி..

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் முதல் ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனாவின் அதிரடியில் இந்திய மகளிர் அணி இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கின்றது.

  • Last Updated :
  • interna, IndiaEnglandEngland

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய மகளிர் அணியின் முதல் ஒருநாள் போட்டியில் ஸ்மிருதி மந்தனாவின் அதிரடியில் இந்திய மகளிர் அணி இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கின்றது.

இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது, இதில் ஹோவில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகளாக எம்மா லாம்ப் மற்றும் டாமி பியூமண்ட் களமிறங்கினர். எம்மா லாம்ப் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேக்னா சிங் பந்துவீச்சில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டை இழந்தது. அவரை தொடர்ந்து சோபியா டன்க்லி களமிறங்கினார். அவர் களமிறங்கிய சிறிது நேரத்தில் டாமி பியூமண்ட் 7 ரன்களில் கோஸ்வாமி பந்துவீச்சில் எல்பிடபியூ ஆனார்.  ‘லேடி கபில்தேவ்’ ஜுலன் கோஸ்வாமி பந்து வீச்சு அபாரமாக இருந்தது.

Also Read : 6 சிக்சர்கள் அடித்த தினம்: தன் குழந்தையுடன் கண்டு களித்த யுவராஜ் சிங்

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் இங்கிலாந்து வீராங்கனைகள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். சோபியா டன்க்லி 29 ரன்கள், ஆலிஸ் கேப்ஸி 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 128 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

ஆனால் இங்கிலாந்தின் பின்வரிசை வீராங்கனைகள் கைகொடுத்தனர். டேனி வியாட்- ஆலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் ஜோடி அபாரமாக விளையாடி அணியின் ரன் கணக்கை உயர்த்தினர். டேனி வியாட் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆலிஸ் டேவிட்சன் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்கள் எடுத்தது.

ஸ்மிருதி மந்தனா அதிரடி:

இந்திய அணியில் ஷபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா தொடக்க ஆட்டக்காரர்களாக  இறங்கினர். ஷபாலி வர்மா 1 ரன்னில் நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். உடனேயே விக்கெட் கீப்பர் யாசிகா இறங்கினார். இவர்கள் இங்கிலாந்து பவுலர்களுக்கு கஷ்டகாலத்தைக் கொடுத்தனர்.

மந்தனா- யாசிகா இருவரும் அரைசதம் அடித்து அசத்தினார். யாசிகா 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சார்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர்- மந்தனாவுடன் இணைந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்மிருதி மந்தனா 91 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 99 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 91 ரன்கள் குவித்தார்.

top videos

    இறுதியில், இந்திய மகளிர் அணி 44.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 232 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஹர்மன்ப்ரீத் கவுர் 74 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    First published:

    Tags: India Vs England, Indian women cricket, Smriti Mandhana