இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில் சதம் அடித்துள்ளார். இந்திய அணி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 3ஆவது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இன்று போட்டிதொடங்கியபோது டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து ரோஹித் சர்மா – சுப்மன் கில் இணை களத்தில் இறங்கி சிறப்பான தொடக்கத்தை அளித்தது. 49 பந்துகளில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகளை பறக்கவிட்ட கேப்டன் ரோஹித் சர்மா 42 ரன்கள் எடுத்திருந்தபோது கருணாரத்னே பந்துவீச்சில், அவிஷ்கா பெர்னாண்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்பின்னர் இணைந்த சுப்மன் கில்- விராட் கோலி இணை, தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.
89 பந்துகளில் அற்புதமாக சதம் அடித்து சுப்மன் கில் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்ட அவர் 116 ரன்கள் எடுத்திருந்தபோது கசுன் ரஜிதா பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 2 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை இந்திய அணி எடுத்திருந்த நிலையில், தொடர்ந்து அணி ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket