மல்லோர்கா தீவுப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக சுமார் 8 கோடி ரூபாயை நிவாரண நிதியாக டென்னிஸ் வீரர் நடால் அளித்துள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் மல்லோர்கா தீவில் கடந்த அக்டோபர் மாதம் 9-ம் தேதி கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. ஏராளமான பொதுமக்கள் தங்களது வீடு மற்றும் உடமைகளை இழந்தனர். தொடர் வெள்ளத்தில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மல்லோர்கா தீவில் தான் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள டென்னிஸ் வீரர் ரபேல் நடால் வசித்து வருகிறார். இவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களத்தில் இறங்கி உதவி செய்தார். வெள்ள பாதிப்பின்போது குவிந்து கிடந்த கழிவுகளை அகற்றும் பணியிலும் அவர் ஈடுபட்டார்.
Three-time Laureus Award winner and tennis icon @RafaelNadal pitches in to help flood victims in the nearby Majorcan town of Sant Llorenç des Cardassar.
Class on and off the court! 🙌 pic.twitter.com/WXPXOZskVL
— Laureus (@LaureusSport) October 10, 2018
பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு வசதியாக, நடால் தனது விளையாட்டு மையம் ஆகியவற்றை திறந்து உதவி செய்தார். மேலும் வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களையும் மீட்க உதவினார். நடாலின் செயலை முன்னணி டென்னிஸ் வீரர்களான பெடரர், ஜோகோவிச் உள்ளிட்டோர் பாராட்டினர்.
தற்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு பணிகளை செய்வதற்காக ஒரு மில்லியன் யூரோவை நிவாரண நிதியாக அளித்துள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8 கோடி ரூபாயை அளித்து உதவி செய்துள்ளார். இவரின் மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Watch...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rafael Nadal