ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 2022-ல் மெல்போர்னில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன, அந்தப் போட்டி இரு அணிகளுக்குமே சம வாய்ப்பு உள்ளது, வெற்றி யாருக்கு என்பதையெல்லாம் இப்போதே கணிக்க முடியாது என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் வேகப்
புயல் ஷோயப் அக்தர்.
யுஏஇ.யில் நடந்த கடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் எல்லோரது எதிர்பார்ப்பையும் உடைத்த இந்திய அணி செம உதை வாங்கியது. பாகிஸ்தான் நோ-லாஸில் வென்றது, ஷாஹின் அப்ரீடி பவுலிங்கில் காலி செய்ய பேட்டிங்கில் பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் விக்கெட்டே கொடுக்காமல் இந்திய பந்து வீச்சை காய அடித்தனர்.
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கேற்ப டி20 உலகக்கோப்பையில் முதல் சுற்றிலேயே இந்தியா வெளியேறியது.இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 உலகக்கோப்பை டி20-யில் அக்டோபர் 23ம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன, அதற்குள் அதற்கு பில்ட் அப் கொடுக்க வந்து விட்டார் ஷோயப் அக்தர்.
ஸ்போர்ட்ஸ்கீடாவுக்காக அவர் கூறியதாவது:
இந்திய அணி ஏனோதானோ என்று ஒரு அணியைத் தேர்வு செய்யக்கூடாது. பாகிஸ்தானுக்கு எதிராக ரோல்களை தெளிவாக முடிவு செய்து வலுவான அணியை இந்தியா களமிறக்க வேண்டும். அணி நிர்வாகம் ஜாக்கிரதையாக இந்திய அணியைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த முறை கடந்த முறை எளிதான வெற்றி பாகிஸ்தானுக்கு சாத்தியமில்லை.
சரியான அணியைத் தேர்வு செய்தால் நிச்சயம் இந்திய அணிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தானை வீழ்த்தலாம். இப்போது இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்கின்றன. எனவே முடிவை கணிப்பது கடினம்.
மெல்போர்ன் பிட்ச் நல்ல பிட்ச். பாகிஸ்தான் இரண்டாவதாக பவுலிங் வீசினால் நல்ல பலன் இருக்கும். 1 லட்சம் பேர் மைதானத்திற்கு போட்டியை நேரில் கண்டு களிக்க வருவார்கள் இவர்களில் 70,000 பேர் இந்தியாவுக்கு சப்போர்ட் செய்வார்கள், எனவே பாகிஸ்தானுக்கு அதிக அழுத்தம் ஏற்படும்.
இவ்வாறு கூறினார் ஷோயப் அக்தர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.