உலகக் கோப்பை தொடரின் 28வது லீக் போட்டியில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சவுதாம்டன் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நடுவர் அலீம் டேர் எல்.பி.டபுள்.யு தரமறுத்தார். இதனையடுத்து கேப்டன் விராட் கோலி நடுவரிடம் அது அவுட் தான் என ஆக்ரேஷமாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.
ஐசிசி விதியன் படி விராட் கோலி நடுவரிடம் அத்துமீறி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக போட்டியின் சம்பளத்தில் 25 சதவீதமும் அபராதம் மற்றும் ஒரு எச்சரிக்கை புள்ளி விதிக்கப்பட்டுள்ளது. நடுவரின் முடிவை கோலி ஏற்றுக்கொண்டதால் அவர் மீது எந்த விசாரணையும் நடத்தப் போவதில்லை.
விராட் கோலி கடந்த 2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் அவருக்கு ஒரு எச்சரிக்கை புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இது 2வது எச்சரிக்கை புள்ளியாகும்.
ஐசிசி விதியின் கீழ் ஒரு வீரர் 24 மாதங்களில் 4 எச்சரிக்கை போல் எடுத்தால் அவரை தடை செய்யவோ அல்லது சஸ்பெண்ட் செய்யவோ வாய்ப்பு உள்ளது. மேலும் 2 எச்சரிக்கை புள்ளிகள் எடுத்தால் ஒரு டெஸ்ட் போட்டி அல்லது 2 ஒரு நாள் போட்டி அல்லது ஒரு டி20 போட்டிக்கு தடை விதிக்க முடியும். இதனால் அடுத்த 2 ஒரு நாள் போட்டிகளில் கோலி விளையாடுவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஐசிசி இதுவரை ஏதும் அறிவிக்கவில்லை.
Also Watch
Published by:Vijay R
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.