கோடைக்காலம் என்பதால் எல்லா மாநிலங்களிலும் மின்வெட்டு, மின் தடை மற்றும் மின் நெருக்கடி அதிகமாக ஏற்படுவது இந்தியாவில் வழக்கம்தான் சிலர் இதைக் கண்டு பேசாமல் போய்விடுவார்கள், சிலர் எதிர்ப்பார்கள், கேள்வி எழுப்புவார்கள். அந்த வகையில் கிரிக்கெட் வீரர், சிஎஸ்கே நட்சத்திரம் தோனியின் மனைவி சாக்ஷி தோனி ஜார்கண்ட் அரசுக்கு நேரடியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு மாநிலங்களிலும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அதிக மின்சாரத் தேவை காரணமாக மாநிலத்தில் நிலக்கரி பற்றாக்குறை நீண்ட நேரம் மின்வெட்டுக்கு வழிவகுக்கும் என்ற செய்திகளுக்கு மத்தியில் சாக்ஷியின் ட்வீட் வந்துள்ளது. நிலக்கரி பற்றாக்குறையால், மின் பற்றாக்குறையை சமாளிக்க மின் நிறுவனங்கள் மாநிலத்தில் மின் சுமையை குறைக்க மின் வெட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு பிரச்சினைக்கு மத்தியில் ஜார்கண்ட் மாநிலத்தில் நிலவும் மின் நெருக்கடி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி சிங் அம்மாநில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சாக்ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
As a tax payer of Jharkhand just want to know why is there a power crisis in Jharkhand since so many years ? We are doing our part by consciously making sure we save energy !
"ஜார்கண்டின் வரி செலுத்துபவராக, இங்கு பல ஆண்டுகளாக மின் நெருக்கடி பிரச்சினை ஏன் உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன். நாங்கள் எங்கள் பங்கைச் சரியாக செய்து வருவதன் மூலம், மின் ஆற்றலைச் சேமித்து வருகிறோம்" என சாக்ஷி தோனி கூறி உள்ளார்.
இதற்கிடையில், மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் திங்கள்கிழமை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து, மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார். மத்திய மற்றும் மாநில அளவில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு கைகோர்த்து செயல்படுமாறு சிங் கேட்டுக் கொண்டதாக மின் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.