முகப்பு /செய்தி /விளையாட்டு / எல்.பி. அவுட் கொடுத்ததால் அல்ல, ‘போய்த் தொலை’ என்றார்கள்: 1981 வாக்-அவுட் குறித்து சுனில் கவாஸ்கர்

எல்.பி. அவுட் கொடுத்ததால் அல்ல, ‘போய்த் தொலை’ என்றார்கள்: 1981 வாக்-அவுட் குறித்து சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

சுனில் கவாஸ்கர்

அந்த டெஸ்ட் போட்டியில், வெற்றி பெற 143 ரன்கள் தேவை என்ற நிலையில் கபில்தேவின் பேய் பவுலிங்கில் ஆஸ்திரேலியா 83 ரன்களுக்குச் சுருண்டது. தொடரை இந்திய அணி 1-1 என்று சமன் செய்தது. இதுதான் இயற்கையின் நீதி. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

1981-ம் ஆண்டு மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கேப்டன் சுனில் கவாஸ்கர் மைதானத்திலிருந்து வெளியேறினார் மீண்டும் அணியை இறக்குவதாகவும் அவர் இல்லை. பிறகு அணி நிர்வாகம் சமாதானம் செய்தது. இது பெரிய சர்ச்சைகளை இன்று வரை எழுப்பி வருகிறது.

கவாஸ்கர், டெனிஸ் லில்லி பந்தில் கால்காப்பில் வாங்க எல்.பி.டபிள்யூ என்று நடுவர் தீர்ப்பளித்தார், பந்து மட்டையில் பட்டுச் சென்றது என்பது கவாஸ்கர் வாதம். அவர் மைதானத்திலேயே நின்றார், இதனையடுத்து டெனிஸ் லில்லி பெவிலியனை நோக்கி கைக்காட்டினார், பிற ஆஸ்திரேலிய வீரர்களும் போய்த்தொலை (கெட் லாஸ்ட்) என்று கவாஸ்கரைப் பார்த்துக் கூறினர்.

இதனால்தான் ஆத்திரம் தாங்காமல் வாக் - அவுட் செய்ததாக சுனில் கவாஸ்கர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். அந்தத் தொடரே ஆஸி. நடுவர் மோசடிகள் நிரம்பியதாக இருந்தது, அப்போது கவாஸ்கருக்கு எல்.பி.தீர்ப்பளித்த நடுவரின் பெயர் ரெக்ஸ் ஒயிட்ஹெட். இவருக்கும் அதுதான் 3வது டெஸ்ட், ஆர்வக்கோளாறில் மிகப்பெரிய கவாஸ்கர் விக்கெட்டை நடுவர் வீழ்த்தினார், கவாஸ்கர் அப்போது 70 ரன்கள் எடுத்து பிரமாதமாக ஆடி வந்தார்.

“எல்.பி. கொடுத்ததால் நான் ஏமாற்றமடைந்தேன் என்று ஆஸி. யும் நினைத்தது, மற்றவர்களும் நினைத்தனர், ஆனால் அதுவல்ல விஷயம். நான் சேத்தன் சவுகானைக் கடந்து செல்லும் போது ஆஸ்திரேலியர்கள் வார்த்தைகளை அள்ளித்தெளித்தார்கள், என்னை தொலைந்து போ என்றனர். அதனால்தான் சேத்தன் சவுகானையும் என்னுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தேன்.

பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டது, பார்வர்ட் ஷார்ட் லெக் பீல்டருக்கு இது நன்றாகத் தெரியும். ஆனால் டெனிஸ் லில்லி ஒப்புக் கொள்ளவில்லை.” என்று சேனல் 7-ல் கவாஸ்கர் தெரிவித்தார்.

அந்த டெஸ்ட் போட்டியில், வெற்றி பெற 143 ரன்கள் தேவை என்ற நிலையில் கபில்தேவின் பேய் பவுலிங்கில் ஆஸ்திரேலியா 83 ரன்களுக்குச் சுருண்டது. தொடரை இந்திய அணி 1-1 என்று சமன் செய்தது. இதுதான் இயற்கையின் நீதி.

இதே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அதிபயங்கர வேகப்பந்து வீச்சாளர்களான டெனிஸ் லில்லி, லென் பாஸ்கோவுக்கு எதிராக குண்டப்பா விஸ்வநாத் அடித்த 114 ரன்களை மறக்கத்தான் முடியுமா?

First published:

Tags: India vs Australia, Melbourne