இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், ரன் குவிக்க தவறினால் விமர்சிக்கத்தான் செய்வார்கள் என்று சவுரங் கங்குலி கூறியுள்ளார். கே.எல். ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவருக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு அணி நிர்வாகம், கேப்டன், பயிற்சியாளர் உள்ளிட்டோர் அளிக்கும் விளக்கங்கள் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமையவில்லை. கடந்த ஆண்டு ராகுல் ஒரே ஒரு அரைச்சதம் மட்டுமே அடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2 டெஸ்டில் நடந்த 3 இன்னிங்ஸ்களில் ராகுல் மொத்தம் 38 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதனால் அவரை ஆடும் லெவனில் இருந்து நீக்கிவிட்டு சுப்மன் கில் அல்லது சூர்யகுமார் யாதவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்டில் கே.எல். ராகுல் விளையாடமாட்டார் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளிவந்தது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரிடமிருந்து துணை கேப்டன் பொறுப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கே.எல். ராகுல் மீதான விமர்சனங்கள் குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியதாவது- ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவியை பறித்துள்ளார்கள். இவ்வாறு நடக்கும் என்று எதிர்பார்த்தேன். ராகுலின் பர்ஃபார்மென்ஸை தொடர்ச்சியாக தேர்வுக்குழுவினர் பார்த்து வந்திருப்பார்கள். அதன் அடிப்படையில் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். ரன்களை குவிக்காவிட்டால் விமர்சனங்கள் எழத்தான் செய்யும். இந்தியாவிலேயே கே.எல். ராகுல் ரன் எடுக்க தவறும்போது அவர் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். இது ராகுலுக்கு மட்டுமல்ல. ஏராளமான திறமையான வீரர்களும் இதேபோன்ற விமர்சனத்தை கடந்த காலங்களில் எதிர்கொண்டுள்ளனர். இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket