முகப்பு /செய்தி /விளையாட்டு / 39.5 ஓவரில் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படாத ஆட்டம்… லக்னோ மைதானத்தை கடுமையாக விமர்சித்த ஹர்திக் பாண்ட்யா

39.5 ஓவரில் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படாத ஆட்டம்… லக்னோ மைதானத்தை கடுமையாக விமர்சித்த ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா

ஹர்திக் பாண்ட்யா

மைதானத்தை பராமரித்தவர்கள் நாங்கள் விளையாடுவதற்கு முன் கூட்டியே அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டி20 போட்டி நடைபெற்ற லக்னோ மைதானம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. 39.5 ஓவர்கள் வீசப்பட்டும் இந்த மைதானத்தில் நேற்று ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், தொடரை தக்க வைக்கும் 2ஆவது டி20 போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களத்தில் இறங்கினர்.

சுப்மன் கில் 11, இஷான் கிஷன் 19, ராகுல் திரிபாதி 13, வாஷிங்டன் சுந்தர் 10 ரன்களில் ஆட்டமிழக்க பொறுப்புடன் விளையாடிய சூர்ய குமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இணை 31 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதனால் இந்திய அணி 19.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த மைதானத்தில் 39.5 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. பிட்ச் மிக மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் மைதானம் குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது- உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த மைதானம் எங்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இன்றைக்கு 2 அணிகளும் ஆடிய ஆட்டம் டி20 ஃபார்மேட்டிற்கானது அல்ல. அதற்கு பிட்ச் முக்கிய காரணம்.

மைதானத்தை பராமரித்தவர்கள் நாங்கள் விளையாடுவதற்கு முன் கூட்டியே அதற்கான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். இந்த மைதானத்தில் முதலில் பேட் செய்யும் அணி 120 ரன்கள் எடுத்தாலே அந்த அணி வெற்றி பெற்று விடும். அந்த அளவிற்கு மைதானம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் கடைசி மற்றும் 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டி புதன் அன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும்.

First published:

Tags: Cricket