சென்னையில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, மூன்று ஒருநாள் போட்டிகளை கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது நடைபெறுகிறது.
இதில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்டு, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தியாவின் சார்பில் இப்போட்டியில் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார். இதையடுத்து, தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, லோகேஷ் ராகுல் களமிறங்கினர்.
7-வது ஓவரில் காட்ரெல் பந்துவீச்சில் ராகுல் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர், வந்த வேகத்தில் கேப்டன் விராட் கோலி, 4 ரன்களில் காட்ரெல் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
எதிர்பாராமல் பந்து ஸ்டெம்பை தகர்க்க சில நொடிகள் கோலி அதிர்ச்சியில் உறைந்தார். மறுபக்கம் பவுலர் காட்ரெல் சல்யூட் வைத்து கோலியை அனுப்பி வைத்தார்.
தற்போது வரை, 32 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் அரைச்சதம் கடந்து 59 ரன்களும், ரிஷப் பந்த் அரைச்சதம் அடித்து 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Click here for live score and updates....
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் போட்டி காரணமாக, சென்னை சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ளது.
போட்டியை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானம் நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால், ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.