வெற்றியின் விளிம்பில் இருந்தபோது ரசிகர்கள் தோனி சிக்ஸர் அடித்து வெற்றி பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பதுண்டு. அதேபோல் இன்றும் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். தோனியும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக மஸ்ரஃபீ ஓவரில் இறங்கி வந்து அடித்தார். பந்து ஆப் சைடு லாங் ஆனில் கேட்ச் சென்றது. 37 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ரோஹித் சர்மாவும், தோனியும் இணைந்து 50 ரன்களை சேர்த்துள்ளனர். ஒரு நாள் போட்டியில் தோனியும், ரோஹித் ஷர்மாவும் இணைந்து எடுத்த 8-வது 50 இது. இருவரும் இணைந்து முதல்முறையாக பங்களாதேஷ்க்கு எதிராக 50 ரன்களை அடித்துள்ளனர். பங்களாதேஷ்க்கு எதிராக 3வது விக்கெட் பார்னர்ஷிப்பில் முதல்முறை 50 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.