ஆஸ்திரேயாலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்துள்ளது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவன் ஆகியோர் களமிறங்கினர். 10 ரன்னில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்து ரோஹித் ஏமாற்றமளித்தார். அதனைத் தொடர்ந்து, லோகேஷ் ராகுல் களமிறங்கினார். ராகுல், தவன் இணை நிதானமாக ஆடி ரன்களைக் குவித்தது. ராகுல் 47 ரன்களும் தவன் 74 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
கோலியும் 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன் குவிக்காத நிலையில், இந்திய அணி 49.1 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், பட் கம்மின்ஸ், கேன் ரிட்சர்ட்சன்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.