இந்திய அணியின் வெற்றி கேப்டனாக வலம் வருபவர் விராட் கோலி. கிரிக்கெட்டில் உலகில் பல சாதனைகளை தன்வசம் வைத்திருப்பவர் விராட் கோலி.
வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிங்க் பந்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்திய அணியின் கேப்டன், சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் விராட் கோலி படைத்துள்ளார்.
விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ஓடுவதில் இவரை மிஞ்சுவது மிகவும் கடினம் என்று ரவீந்திர ஜடேஜாவை குறிப்பிட்டுள்ளார். பயிற்சியின் போது ஜடேஜா, விராட் கோலி, ரிஷப் பந்த் மூவரும் ஓடும் புகைப்படத்தை விராட் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரிந்துள்ளார். அந்த பதிவில், “குழுவாக பயிற்சி மேற்கொள்வது சந்தோஷமாக உள்ளது. ஓடுவதில் ஜடேஜாவை மிஞ்சுவது என்பது முடியாத ஒன்று“ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வரும் டிசம்பர் 6ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் ஷிகார் தவான் காயம் காரணமாக விலகி உள்ளதால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெற்றுள்ளார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.