முகப்பு /செய்தி /விளையாட்டு / WC Women’s T20 : அயர்லாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி…

WC Women’s T20 : அயர்லாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி…

அயர்லாந்து விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தில் இந்திய மகளிர் அணி

அயர்லாந்து விக்கெட்டை வீழ்த்திய உற்சாகத்தில் இந்திய மகளிர் அணி

8.2 ஓவரில் அயர்லாந்துஅணி 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் வென்றது. மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்திய அணி வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த போட்டியில் அயர்லாந்து – இந்திய அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா 24 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 87 ரன்களும் குவித்தனர். கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 13 ரன்னும், ஜெமிமா ரோட்ரிகஸ் 19 ரன்களும் சேர்க்க அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்தது. அயர்லாந்து தரப்பில் கேப்டன் லாரா டெலானி 3 விக்கெட்டுகளையும், ஓர்லா ப்ரென்டர்கஸ்ட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களத்தில் இறங்கியது. தொடக்க வீராங்கனை எமி ஹன்டர் 1 ரன் எடுத்திருந்தபோது ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மற்றொரு வீராங்கனை கேபி லீவிஸ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். 8.2 ஓவரில் அயர்லாந்துஅணி 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. அடுத்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டதால், ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்த நடுவர்கள், டக்வொர்த் லீவிஸ் முறையில் இந்திய அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் குரூப் பி-யில் 2ஆம் இடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

First published:

Tags: Cricket