கொரோனோ வைரஸ் அச்சுறுத்தல், ஊரடங்கு அமலில் உள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் பயணம் செய்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அத்துடன் கொரோனோ வைரஸ் ஆஸ்திரேலியாவில் வீரியம் எடுத்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த உலகக் கோப்பை டி20 போட்டிகள் 2022 க்கு ஒத்திவைக்க ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது.
நாளை வீடியோ கானரன்ஸ் மூலம் அனைத்து நாட்டு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் மற்றும் ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கும் பட்சத்தில் நடப்பு ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் நடத்த பி.சி.சி.ஐ முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.