தொடர்ந்து இத்தனை மாதங்கள் இந்திய அணி வீரர்களுடன் இருந்து விட்டு இப்போது சென்னை டெஸ்ட்டில் இல்லாதது கஷ்டமாகவே இருக்கிறது என்று கூறியுள்ளார் தமிழக கிரிக்கெட் வீரர் யார்க்கர் நடராஜன்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு நடராஜன் அளித்த பேட்டியில், “இந்திய அணியுடன் இல்லாதது கஷ்டமாக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அணியுடனே இருந்துவிட்டு இப்போது இல்லாதது கடினமாக இருக்கிறது. ஆனால் குடும்பத்துடன் 6 மாதங்கள் இல்லாததால், இந்த ஓய்வு எனக்கு அவசியமாகிறது, அதனை நான் புரிந்துக்கொண்டேன். ஆனால் சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் இல்லாதது நிச்சயம் வருத்தம்தான்" என்றார்.
மேலும் "நான் கிரி்க்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் விளையாடவே விரும்புகிறேன். இது எனக்கு எப்போதும் அழுத்தமாக இருக்காது. அதற்கு ஏற்றார்போல என்னை தயார் செய்துகொள்வேன்.
பொது முடக்க காலத்தில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டேன். அதுதான் என்னை ஐபிஎல், ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட வைத்தது. இதை எப்போதும் செய்வேன்.
அணியில் பயிற்சியாளர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர். அணிக்கு புதிதாக வந்திருக்கிறேன் என்ற உணர்வே ஏற்படவில்லை. அனைவருடனும் சகஜமாக இருக்க முடிந்தது.
பயிற்சியாளர் பாரத் அருணிடம் நிறைய பேசியிருப்பதால் எனக்கு சிக்கலில்லை, அவருடன் சுதந்திரமாக சந்தேகங்களைக் கேட்க முடிந்தது. ஒரு குறிப்பிட்ட சூழலில் எப்படி வீசுவது என்று சொல்லித் தருவார், அல்லது திறம்பட எப்படி வீசுவது, தாக்கம் எப்படி ஏற்படுத்துவது என்பதை அவரிடம் தெரிந்து கொண்டேன். 3 வடிவங்களிலும் ஆட வேண்டும் என்றால் என் உடற்தகுதி கச்சிதமாக இருக்க வேண்டும், அதைத்தான் அவர்களும் வலியுறுத்துகின்றனர்” என்றார் நடராஜன்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி பிப்.5ம் தேதி தொடங்குகிறது, இதில் நடராஜனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
Published by:Muthukumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.