இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் சுப்மன் கில்லின் மிகப்பெரும் ரசிகன் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாராட்டு தெரிவித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார் சுப்மன் கில். இந்த போட்டியில் 208 ரன்கள் எடுத்த சுப்மன் கில், ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை அதிவேகமாக கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஏற்படுத்தினார்.
விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்தனர். இதனை 19 இன்னிங்ஸ்களில் கில் கடந்துள்ளார். இதன் மூலம் விவியன் ரிச்சர்ட்ஸ், பாபர் ஆசம், கெவின் பீட்டர்சன், ஜோனதன் ட்ராட், குவின்டன் டி காக், ரேஸி வாண்டர்சன் உள்ளிட்டோரின் சாதனைகளையும் முறியடித்துள்ளார். 23 வயதாகும் இவர் 20 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இவரது சராசரி 71.38 ரன்னாக உள்ளது. சுப்மன் கில் தொடர்ந்து ஃபார்மில் இருப்பதால் அவர் மீதான கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் அதிகரித்துள்ளது.
சுப்மன் கில்லின் ஆட்டம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் கூறியதாவது- நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சுப்மன் கில்லின் ஆட்டத்தை பார்த்தேன். அப்போதே அவருடைய மிகப்பெரிய ரசிகனாக மாறி விட்டேன். அவருடைய பேட்டிங் ஸ்டைல் அற்புதமாக இருக்கும். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில்லின் பேட்டிங் மிகச்சிறப்பாக இருந்தது. இந்த இளம் வயதில், பாராட்டத்தக்க வகையில் சுப்மன் விளையாடியுள்ளார். அவர் தொடர்ந்து இதேபோன்று விளையாடினால் இன்னும் பல சாதனைகளை முறியடிப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket