முகப்பு /செய்தி /விளையாட்டு / அகமதாபாத் டெஸ்ட் டிராவில் முடிந்தது… தொடரை கைப்பற்றியது இந்திய அணி

அகமதாபாத் டெஸ்ட் டிராவில் முடிந்தது… தொடரை கைப்பற்றியது இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணி

முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 3 ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா இந்திய அணி வீழ்த்தியது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்துள்ளது. இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றுள்ளது. முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 3 ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா இந்திய அணி வீழ்த்தியது. இந்நிலையில் கடைசி மற்றும் 4 ஆவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்துள்ளது.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் கடந்த வியாழன் அன்று தொடங்கியது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 480 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த இந்திய அணி நேற்றைய 4 ஆம் நாள் ஆட்டத்தின்போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 571 ரன்களை குவித்தது. 91 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி நேற்று தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கியது. 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி அந்த அணி 3 ரன்களை எடுத்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக பவுலர் மேத்யூ குன்மன் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களத்தில் இறங்கியிருந்தனர். அணி 14 ரன் எடுத்திருந்தபோது அஷ்வின் சுழலில் குன்மன் 6 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து இணைந்த டிராவிஸ் – லபுஸ்சேன் இணை பொறுப்புடன் விளையாடி ஆமை வேகத்தில் ரன்களை சேர்த்தனர். 163 பந்துகளை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் 90 ரன்கள் எடுத்து அக்சர் படேல் சுழலில் போல்டானார். 213 பந்துகளை எதிர்கொண்ட லபுஸ்சேன் 63 ரன்கள் எடுத்தார். அவருடன் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 10 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். 78.1 ஆவது ஓவரின் போது ஆட்டம் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 4 போட்டிகள்கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

First published:

Tags: Cricket