முகப்பு /செய்தி /விளையாட்டு / 10,000 பந்துகள் வீசிய வரலாற்று சாதனையுடன் விடைபெற்றார் ஜுலன் கோஸ்வாமி..!

10,000 பந்துகள் வீசிய வரலாற்று சாதனையுடன் விடைபெற்றார் ஜுலன் கோஸ்வாமி..!

ஜூலன்

ஜூலன்

ஜூலன், சனிக்கிழமை, பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்  வரலாற்றில் 10,000 பந்துகளை வீசிய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெயரை பெற்றார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu | london

ஜுலன் கோஸ்வாமி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் சர்வதேச போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையுடன் விடைபெற்றார்.

புகழ்பெற்ற ஜூலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது பெயருக்கு மேலும் ஒரு மைல்கல்லைப் பதித்துள்ளார். ஜூலன், சனிக்கிழமை, பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்  வரலாற்றில் 10,000 பந்துகளை வீசிய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெயரை பெற்றார்.

39 வயதான அவர் 204 ஒருநாள் போட்டிகளில் 10,005 பந்துகளை வீசிய பின்னர் ஓய்வு பெற்றார். இந்த வடிவத்தில் அவர் எடுத்த 255 விக்கெட்டுகள் பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை எடுத்த சாதனையாகும். இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள இங்கிலாந்தின் கேத்ரின் பிரண்ட் இதுவரை 141 போட்டிகளில் விளையாடி 6847 பந்துகளை வீசியுள்ளார்.

லார்ட்ஸில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை க்ளீன் ஸ்வீப் செய்து முடித்தது. ஜூலன் கோஸ்வாமி 2002 இல் அறிமுகமான பிறகு 20 ஆண்டு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை வெற்றிகரமாக முடித்தார்.

ALSO READ | அஸ்வின் ஆன தீப்தி, மன்கட் முறையில் ரன் அவுட் - அதிர்ச்சியில் உறைந்த இங்கிலாந்து 3-0 ஒயிட்வாஷ்!

இது ஜூலனின் கடைசி விளையாட்டு என்று எனக்குத் தெரியும், ஆனால் நாங்கள் அவரை எப்போதும் நினைவில் கொள்வோம், அவள் எப்போதும் எங்களுடன் இருப்பார், அவர் நமக்குத் தேவைப்படும்போது அவர் ஒரு அழைப்பில் எட்டிவிடக்கூடியவர்தான். அவருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்று போட்டிக்கு முன்னதாக உடைந்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்  கூறினார்.

ஜூலன் கோஸ்வாமி கூறும்போது, “பிசிசிஐ, எனது நண்பர்கள், எனது குடும்பத்தினர், எனது பயிற்சியாளர்கள், அணியினர், கேப்டன்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அனைவருக்கும், இந்த வாய்ப்புக்கு நன்றி, இது மிகவும் சிறப்பான தருணம். நான் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருத்தல் வேண்டும். கிரிக்கெட் மைதானத்தில் அந்த உணர்வுகளுடன் என்னால் வர முடியாது. ஒரு விட்டுக்கொடுக்காத வீராங்கனையாக, நான் வெளியே வந்து கடினமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும் மற்றும் என்னுடைய சிறந்ததை  கொடுக்க வேண்டும்" என்று போட்டிக்கு முன்னதாகத் தெரிவித்தார்.

First published:

Tags: Cricket, Retirement, Sports