வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 154 ரன்கள் இலக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.
இந்தியா - வங்கதேசம் மோதும் 2வது டி20 போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக லிட்டன் தாஸ், முஹமது நைம் களமிறங்கினார்கள். தொடக்க ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வங்கதேச அணி 60 ரன்கள் எடுத்திருந்த போது லிட்டன் தாஸை ரிஷப் பந்த ரன் அவுட்டாக்கினார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய சவுக்கார் இந்திய அணியின் பந்துவீச்சை சிதறவிட்டார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான முஹமது நைம் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வெளியேறினார். இதன்பின் வங்கதேச அணி விக்கெட்களை அடுத்தடுத்து இழந்து தடுமாறியது.
இறுதியாக வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் சஹால் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் தொடரை இழக்கும் என்பதால் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.