ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்துவரும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்தில் பந்துவீசிய இஷாந்த் சர்மா பல வரலாற்றுச் சுவடுகளை பதிவு செய்துள்ளார்.
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கொல்கத்தா, ஈடன் கார்டன் மைாதனத்தில் தொடங்கியது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக ஷாட்மேன் இஸ்லாம், இம்ருல் கயஸ் களமிறங்கினர். இந்திய அணியின் மூத்த பந்துவீச்சாளர் இஷாந் சர்மா முதல் ஓவரை வீசினார். அபாராமாக பந்து வீசிய இஷாந்த் சர்மா முதல் ஓவரை மெய்டன் செய்தார்.
அதுமட்டுமின்றி இந்திய பந்துவீச்சாளர்களில் பிங்க் பந்தில் முதல் விக்கெட்டையும் இஷாந்த் சர்மா வீழ்த்தி உள்ளார். வங்கதேச அணி 15 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந் சர்மா பந்துவீச்சில் இம்ருல் கயஸ் 4 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
மேலும் இந்த டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்துவீசிய இஷாந்த் சர்மா 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் பிங்க் பந்தில் முதல் ஓவர், முதல் மெய்டன், முதல் விக்கெட் மற்றும் 5 விக்கெட்களை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றை இஷாந்த் சர்மா பதிவு செய்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 106 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதை தொடர்ந்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.